உக்ரைன் போரில் தோற்றால்... புடின் தப்பியோட திட்டமிட்டிருக்கும் நாடு
உக்ரைன் போரில் தோல்வியடைந்தால், தென் அமெரிக்க நாடு ஒன்றிற்குத் தப்பியோட புடின் திட்டம் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இரகசிய ’எஸ்கேப்’ திட்டம்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கூட்டாளிகள், உக்ரைன் போரில் தோல்வியடைந்தால், தென் அமெரிக்க நாடு ஒன்றிற்குத் தப்பியோட புடின் திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக புடின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுக்கக்கூடிய முன்னாள் அலுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இஸ்ரேல் நாட்டில் வாழும் Abbas Gallyamov என்னும் அந்த நபர், அந்த இரகசிய திட்டத்துக்கு ‘நோவாவின் பேழை’ என்றி பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நான் பொதுவாக இதுபோன்ற விடயங்களை தெரிவிப்பதில்லை. ஆனால், இந்த தகவல் நம்பிக்கைக்குரிய ஒருவரிடமிருந்து வந்துள்ளது என்று கூறியுள்ள Abbas, முதலில் புடின் சீனாவுக்குத்தான் தப்பியோட திட்டம் வைத்திருந்ததாகவும், ஆனால், சீனாவுக்கு தோற்பவர்களைப் பிடிக்காது என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Image: MAXIM SHEMETOV/POOL/EPA-EFE/REX/Shutterstock
எந்த நாட்டுக்குத் தப்பியோடத் திட்டம்?
உக்ரைன் போரில் தோற்கும் நிலையில், புடின் அர்ஜெண்டினா அல்லது வெனிசுவேலா நாட்டில் சென்று தஞ்சம் அடைய திட்டம் உள்ளதாம்.
அர்ஜெண்டினா குறித்து தனக்கு கூடுதல் தகவல்கள் தெரியாது என்று கூறும் Abbas, ஆனால், ரஷ்ய செல்வந்தர்களில் ஒருவரான Igor Sechin என்னும் நபருக்கு வெனிசுவேலா ஜனாதிபதியுடன் நல்ல உறவு இருப்பதாகவும், ஆகவே, அவர் புடின் அந்நாட்டில் தஞ்சம் அடைவது தொடர்பான திட்டத்தை மேற்பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Image: ALEXEI DRUZHININ/SPUTNIK/KREMLIN POOL/POOL/EPA-EFE/REX/Shutterstock