ஈரான் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல் - புடின் எடுத்த முக்கிய முடிவு
இஸ்ரேல் உடனான போரில் ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வதாக புதின் அறிவித்துள்ளார்.
அணு சக்தி நிலையத்தில் தாக்குதல்
ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்திருந்தார்.
ஆனால், அமெரிக்காவின் இந்த தாக்குதலை எதிர்பார்த்த ஈரான் முன்னதாகவே அங்கிருந்த யுரேனியத்தை இடம் மாற்றி விட்டதாகவும், ஈரானுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் ஈரான் விளக்கமளித்துள்ளது.
அதேவேளையில், அமெரிக்காவிற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உச்சந்தலைவர் அலி காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையமான ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை குண்டு துளைக்காத வகையில் மலைக்கு அடியில் கட்டமைத்திருந்தது. அமெரிக்கா தனது 13,000 கிலோ எடை கொண்ட ஜி.பி.யூ - 57 ரக வெடிகுண்டை வீசியும் சேதாரம் ஆகவில்லை என ஈரான் தெரிவித்திருந்தது.
ரஷ்யா உதவி
இந்நிலையில், இஸ்ரேல் இன்று மீண்டும் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஈரானின் ராணுவ விமான நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, ரஷ்யா சென்று ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இஸ்ரேல் ஈரான் போரில் ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடான ரஷ்யா, ஈரானுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |