கையிருப்பு தங்கத்தை விற்க தொடங்கிய புடின் அரசு... வெளிப்படும் ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடி
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைன் போருக்கான அதிகப்படியான செலவுகள் காரணமாக, ரஷ்யாவின் நிதி நிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா தனது மத்திய வங்கி கையிருப்பு தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2026 ஜனவரியில் 3 லட்சம் அவுன்ஸ் தங்கம் விற்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் மேலும் 2 லட்சம் அவுன்ஸ் விற்கப்பட்டது.
மொத்தம் சுமார் 14 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது 2002-க்குப் பிறகு ரஷ்யா மேற்கொண்ட மிகப்பெரிய தங்க விற்பனை ஆகும்.

இந்த விற்பனை காரணமாக, ரஷ்யாவின் மொத்த தங்க கையிருப்பு 74.3 மில்லியன் அவுன்ஸாகக் குறைந்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் குறைந்த அளவாகும்.
“புடின் அரசு போருக்கான செலவுகளை சமாளிக்க தங்கத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் நிதி நெருக்கடியை வெளிப்படுத்துகிறது” என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள் காரணமாக, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் குறைந்துள்ளது. இதனால், அரசு தனது கையிருப்பு சொத்துகளை விற்று நிதி நிலையை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.
இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் பொருளாதார பலவீனத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |