விளாடிமிர் புடினுக்கு மரண பயத்தை காட்ட வேண்டும்: கொந்தளித்த பிரித்தானிய மூத்த அதிகாரி
உக்ரைனை அடுத்து வேறு அண்டை நாடுகளுக்கும் ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தால் விளாடிமிர் புடினுக்கு மரண பயத்தை காட்ட வேண்டும் என பிரித்தானிய கடற்படை தலைவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா தனது படையெடுப்பை உக்ரைனுடன் முடித்துக் கொள்ள நேட்டோ நாடுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், அப்படியானால் மட்டுமே ரஷ்யாவின் பார்வை வேறு நாடுகளுக்கு திரும்பாது என குறிப்பிட்டுள்ளார் பிரித்தானிய கடற்படை தளபதி அட்மிரல் சர் பென் கீ.
உக்ரைனை அடுத்து ரஷ்யாவின் பார்வை மால்டோவா மீது பதியும் எனவும், இன்னொரு படையெடுப்புக்கு அவர் மிக விரைவில் உத்தரவிடுவார் என தகவல் கசிந்த நிலையிலேயே பிரித்தானிய கடற்படை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஸ்வீடன் அறிவித்ததை அடுத்து, அந்த நாடு மீது ரஷ்யாவின் தலையீடு ஏற்படும் என்ற அச்சமும் உள்ளது.
இந்த நிலையில், அட்மிரல் சர் பென் கீ தெரிவிக்கையில், நாம் இப்போது மிக மோசமான சூழலில் உள்ளோம், மட்டுமின்றி, உக்ரைனுக்கு நாம் அளித்துவரும் ஆதரவு எஞ்சிய நேட்டோ நாடுகள் மீதும் முன்னெடுக்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒரு சூழலை நாம் தற்போது உருவாக்கினால் மட்டுமே ரஷ்யாவுக்கு அது பீதியை ஏற்படுத்தும் என்றார்.
உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடின் மிகப்பெரிய தவறு செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை அளிக்க வேண்டும் எனவும், அதனால் அவர்கள் தங்கள் நிலத்தையும், மக்களையும் காப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.