மிக மோசமான இரவை எதிர்கொள்ளும் விளாடிமிர் புடின்... ட்ரோன் தாக்குதலில் தடுமாறும் ரஷ்யா
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென கூறும் வகையில், நான்கு இராணுவ விமானங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான தளத்தை தாக்கிய
10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்பு எஸ்டோனியா மற்றும் லாட்வியாவின் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ட்ரோன் தாக்குதலில் நான்கு Il-76 போக்குவரத்து விமானங்களை சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஓரியோல், பிரையன்ஸ்க், ரியாசான், கலுகா மற்றும் மாஸ்கோ பகுதியில் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Pskov பிராந்திய கவர்னர் Mikhail Vedernikov தாக்கப்பட்ட விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களையும் இன்று ரத்து செய்ய உத்தரவிட்டார். அதனால் சேதத்தை பகலில் மதிப்பிட முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கும் பொறுப்பேற்க
இந்த நிலையில் மாஸ்கோவிற்கு வெளியே உள்ள மூன்று விமான நிலையங்கள் - ஷெரெமெட்டியோ, வ்னுகோவோ மற்றும் டோமோடெடோவோ ஆகியவையில் தற்காலிகமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து இந்த விவகாரம் தொடர்பில் உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை. மேலும், அவர்கள் பொதுவாக ரஷ்ய மண்ணில் எந்தவொரு தாக்குதலுக்கும் பொறுப்பேற்க மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |