உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புடின் கூறும் யோசனை
போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனில் தற்காலிக நிர்வாகம் அமைக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பரிந்துரை செய்துள்ளார்.
இதன்மூலம் உக்ரைனில் புதிய தேர்தல்களை நடத்தி, முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புடின் தெரிவித்துள்ளார்.
Murmansk நகரத்தில் கடலோரப்படை வீரர்களுடன் பேசியபோது, உலக நாடுகள் இணைந்து இந்த தாற்காலிக நிர்வாகத்தை அமைக்கலாம் என புடின் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவின் கூட்டாளி நாடுகள் இணைந்து ஒரு தற்காலிக நிர்வாகத்தை உருவாக்கலாம் என்றும், பின்னர் உக்ரைனில் ஜனநாயக தேர்தல் நடத்தி, மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சியை அமைத்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்து பேசலாம் என கூறியுள்ளார்.
இதற்கு உக்ரைன் அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இப்போருக்கு விரைவில் தீர்வு காண அவர் முயற்சிக்கிறார்.
ஆனால், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் நிர்வாகம் அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி மக்கள் தான் தீர்மானிக்க முடியும் என கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |