பிரித்தானிய பிரதமர் மீது குறி... சைபர் தாக்குதலை தீவிரப்படுத்தும் புடின்!
ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவான ட்ரோல் மீம்ஸ்களை இணையத்தில் பரப்பும், தகவல் போரை முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு ஆதரவாக ஜனாதிபதி புடின் மிகப்பெரிய அளவிலான சைபர் செயல்பாடுகளை முக்கிய இணையதள பக்கங்கள் வாயிலாக நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
'Cyber Front Z என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த சைபர் தாக்குதல் அமைப்பு ரஷ்யாவின் இரண்டாவது நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வாடகைக் கிடங்கில் இயங்குவதாகவும், இவை நவ நாஜிகளின் பிடியில் இருந்து உக்ரைனை காப்பாற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ராணுவ சிறப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவான கருத்துகளையும் இணையத்தின் முக்கிய பக்கங்களான இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் டெலிகிராம் ஆகியவற்றில் பரப்பிவதாக தெரிவித்துள்ளது.
புடினின் சொல்லாட்சிக்கு ஆதரவாக ஒருநாளைக்கு 200 கருத்துகள் வரை பதிவிடுவதற்கு மாதம் 45,000 ரூபிள் ஊதியமாக வழங்கிவதாகவும் பிரித்தானிய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சைபர் தாக்குதல் குழுவானது, மேற்கத்திய ஊடகங்கள், பிரித்தானிய பிரதமர் Boris Johnson, ஜெர்மன் ஜனாதிபதி Olaf Scholz மற்றும் EU வெளியுறவுக் கொள்கைத் தலைவர் Josep Borrell ஆகியோரின் சமூக ஊடகங்களை குறிவைத்து பின்தொடர்வதாகவும் எச்சரித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: FSB தலைவரின் கீழ் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்கும் புடின்: ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு தகவல்!
சைபர் தாக்குதல் குழுவால் பரப்படும் இத்தகைய ட்ரோல் மீம்ஸ்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினின் செயல்பாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாடை எடுக்க பொதுமக்களுக்கு மறைமுகமாக அழுத்தம் தருவதாக தெரிவித்துள்ளது.