உக்ரைன் போரில் நேரடி ஈடுபாடு: பிரித்தானியாவுக்கு எதிராக சபதம் செய்த புடின்
உக்ரைனுக்கு எதிரான தனது போரில் பிரித்தானியா நேரடியாக தலையிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய விளாடிமிர் புடின் பழிவாங்குவது உறுதி என சபதம் செய்துள்ளார்.
பழி தீர்க்க தம்மால் முடியும்
சர்வதேச பத்திரிகையாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், பிரித்தானிய ஆயுதப் படைகள் ரஷ்ய இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைக் குறிவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் எதிரிகளுக்கு சக்தி வாய்ந்த ஆயுதங்களை விநியோகம் செய்து பழி தீர்க்க தம்மால் முடியும் என்றும், உக்ரைனுக்கு தொலை தூர ஏவுகணைகளை வழங்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இது பொருந்தும் என்றார்.
மட்டுமின்றி, ரஷ்யாவின் நிலைகளை குறிவைக்க அமெரிக்காவும் பிரான்சும் தனது ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதாகவும் புடின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு இலக்கானால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்றும் அவர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஈடுபாடு
உக்ரைன் வீரர்கள் தொடர்பில் தமக்கு தெரியும் என்றும், தொலை தூர ஏவுகணைகளை பயன்படுத்தி அவர்களால் தனித்து தாக்குதல் தொடுக்க முடியாது என்றும், அதற்கான அடுத்ததடுத்த நிலைகள் என்ன என்பது தமக்கு தெரியும் என்றும்,
இதன் பின்னணியில் கண்டிப்பாக மேற்கத்திய நாடுகளின் ஈடுபாடு பதிவாகியுள்ளது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆயுதங்களை வழங்கியவர்களால் மட்டுமே, அதற்கான வழி முறைகளை உருவாக்க முடியும் என்றும் புடின் விளக்கமளித்துள்ளார்.
ATACMS என்றால் அமெரிக்கா அதில் ஈடுபட்டிருக்கும் என்றும் Storm Shadow என்றால் அதில் பிரித்தானியா ஈடுபட்டிருக்கும் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |