பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி

Ukraine Russian Federation
By Arbin Aug 03, 2026 06:01 AM GMT
Report

ரஷ்ய உணவகம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் புடினின் போர்த் தளபதிகளில் ஒருவர் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 19 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். கிரெம்ளினிலிருந்து ஒரு மைலுக்கும் சற்று அதிகமான தொலைவில் உள்ள குத்ரின்ஸ்கயா சதுக்கத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி | Putin War Commander Survives

பரிசுப்பொருள் என கூரியர் மூலம் அந்த உணவகத்திற்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளிப் படைகளின் தலைமைத் தளபதியும் மூத்த போர் தளபதியுமான அலெக்சாண்டர் சாய்கோவின் 55-வது பிறந்தநாள் கொண்டாட்டம் அந்த உணவகத்தில் நடைபெற்றது.

உள்ளூர் செய்திகளின் அடிப்படையில், அந்தத் தாக்குதலில் தளபதி உயிர் பிழைத்த போதிலும், அவரது மருமகன் கொல்லப்பட்டார் மற்றும் அவரது மகள் பலத்த காயமடைந்தார்.

சுமார் 85,000 பவுண்ட் செலவில் நடைபெற்ற அந்த விருந்து நிகழ்ச்சியில், மாஸ்கோவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், உயர்மட்ட ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்

ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்

வெளியாகியுள்ள தகவலில், வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மரணமடைந்த இருவரில், முன்னாள் தொழில்முறை ஐஸ் ஹாக்கி வீரரான 27 வயது டேனில் பெரெட்ரியும் (Daniil Peredriy) ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது.

அந்த வெடிவிபத்தில், அவரது மனைவியும் சாய்கோவின் மகளுமான 25 வயதுடைய மரியா பெரெட்ரி மூளைக் காயத்திற்கு ஆளானார். கடந்த ஜூன் மாதம் உக்ரைன் நிர்வாகத்தால் போர்க்குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டவர் தளபதி சாய்கோ.

இவர் ரஷ்யாவில் பல விருதுகளைப் பெற்ற போர் நாயககானக் கொண்டாடப்படும் நபராவார்; மேலும், Tu-95MS ரக விமானங்களைப் பயன்படுத்தி உக்ரைன் மீது நடத்தப்பட்ட கொடூரமான வான்வழித் தாக்குதலுக்குப் பின்னணியில் செயல்பட்டவரும் இவரே.

பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி | Putin War Commander Survives

2022-இல் உக்ரைன் மீதான புடினின் ஆரம்பக்கட்டப் படையெடுப்பின்போது, ​​கீவ் நகருக்கு அருகிலுள்ள புச்சாவில் குறைந்தது 450 பேர் கொல்லப்பட்டதோடு, அங்குப் பரவலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை இவரது படைகள் மேற்கொண்டன; அக்காலகட்டத்தில் கீவ் முன்னணியில் ரஷ்யப் படைகளுக்குச் சாய்கோ (Chayko) தலைமை தாங்கினார்.

புச்சா படுகொலை என்பது இமோதலில் ரஷ்யா இழைத்த மிக மோசமான போர்க்குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இறப்புகள் குறித்த உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், ரஷ்யப் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய 'சேனல் 112' (Channel 112) வெளியிட்ட தகவல்கள் இந்தக் கொடூரங்களை அம்பலப்படுத்தியுள்ளன.

இழைக்கப்பட்ட போர்க்குற்றம்

இதனிடையே, மாஸ்கோ காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கிடைத்துள்ள தகவலின்படி, இரவு சுமார் 8.10 மணியளவில் பிரபலமான ஒரு உணவகத்திற்கு அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்களுடன் தப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புடினின் மிக இளம் வயது தளபதிகளில் ஒருவரான 39 வயதுடைய டிமிட்ரி மிகைலோவ், போர்க்களத்தில் FPV ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டதாக உக்ரேனிய தரப்பில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி | Putin War Commander Survives

இசியும் (Izium) பகுதியில் ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்பின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுடன் இவர் தொடர்புடையவர் என்று உக்ரேனிய விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்போரில் டசினுக்கும் மேற்பட்ட ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். டிமிட்ரி மிகைலோவுக்கு 36 வயதாக இருந்தபோதே ஜனாதிபதி புடின் அவரை ஜெனரலாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US