உக்ரைனிடம் ரஷ்ய வீரர்கள் சரணடைந்தால் தண்டனை கடுமையாக இருக்கும்! எச்சரித்த புடின்
சரணடையும் ரஷ்ய வீரர்கள் நாகரீகமாக நடத்தப்படுவார்கள் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
ரஷ்ய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை பின்பற்றாவிட்டால் தண்டனை என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ரஷ்ய வீரர்கள் தானாக முன் வந்து உக்ரைனிடம் சரணடைந்தால் தமது அரசு 10 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போரை நடத்தி வரும் ரஷ்யா, தாக்குதலை தீவிரப்படுத்த ராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக 3 லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷ்ய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்ய வீரர்களை சரணடையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் சரணடையும் வீரர்கள் நாகரீகமாக நடத்தப்படுவார்கள் என்றும், சரணடைந்த சூழ்நிலையை யாரும் அறிய மாட்டார்கள் என்றும் கூறினார்.
ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனிச் சட்டம் ஒன்றில் கையெழுத்திட்டார். மேலும், ரஷ்ய வீரர்கள் சண்டையிட மறுத்தாலோ அல்லது உக்ரைனிடம் தானாக முன்வந்து சரணடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.