புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார்... எச்சரிக்கும் ரஷ்ய முன்னாள் தூதர்
புடின் நிரந்தர தூக்கத்துக்கு அனுப்பப்படுவார், மீண்டும் அவர் எழுந்திருக்கவேமாட்டார் என முன்னாள் ரஷ்ய தூதர் ஒருவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பின்னடைவை சந்தித்துவரும் புடின்
எளிதாக உக்ரைனை தோற்கடித்துவிடலாம் என தப்புக்கணக்குப் போட்ட புடின், தொடர்ந்து உக்ரைன் போரில் பெரும் பின்னடைவை சந்தித்துவருகிறார்.
போரில், ஏராளம் போர் வீரர்களையும், ஆயுதங்களையும் இழந்துவிட்டது ரஷ்யா.
அதனால், அவரது வட்டாரத்திலும், ரஷ்ய மக்களிடையேயும் அவருக்கு எதிர்ப்பு உருவாகிவருகிறது.
Image: Vladimir Smirnov/AP/REX/Shutterstock
எச்சரிக்கும் முன்னாள் தூதர்
இந்நிலையில், ஒன்றில் புடினுடைய ஆட்சி பயங்கரமான முறையில் கவிழ்க்கப்படலாம் அல்லது அவர் கொல்லப்படலாம் என முன்னாள் தூதர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோல்வியை சந்திக்குமானால், ரஷ்ய செல்வந்தர்களாலேயே நிரந்தர தூக்குத்துக்குக் கொண்டு செல்லப்படுவார் புடின் என்றும், அதற்குப் பின் அவர் எழுந்திருக்கவேமாட்டார் என்றும் கூறியுள்ளார், ஐ.நாவுக்கான முன்னாள் ரஷ்ய தூதரான Boris Bondarev என்பவர்.
தங்களிடம் பொய் சொல்லி புடின் தங்களை முட்டாள்களாகிவிட்டதாக ரஷ்ய மக்கள் கருதும் நிலையில் புடின் பதவி விலக கட்டாயப்படுத்தப்படலாம் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் Boris.
இன்னொரு பக்கம், தோல்வியடைந்துவிடுவோமோ என அஞ்சும் புடின், எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடிவெடுக்கக்கூடும் என்றும் தான் கவலைப்படுவதாகவும் தெரிவிக்கிறார் Boris.
Image: SPUTNIK/AFP via Getty Images