ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் சந்திப்பு: உக்ரைன் போர், தைவான் பதற்றம் குறித்து விவாதம்!
ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகள் உஸ்பெகிஸ்தான் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இருநாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவுகள் குறித்து விவாதிக்க இருநாட்டு தலைவர்களும் சந்திக்க இருப்பதாக தகவல்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் உஸ்பெகிஸ்தானின் பண்டைய உஸ்பெக் பட்டுப்பாதை நகரத்தில் சந்திக்கவுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நெருக்கடி, சீனா தைவான் இடையிலான பதற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதிகள் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெறும் ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் வியாழக்கிழமை பண்டைய உஸ்பெக் பட்டுப்பாதை நகரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த சந்திப்பில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், தைவான் பதற்றம், சீனாவின் வளர்ந்து வரும் வல்லரசுக்கும், இயற்கை வளங்களின் டைட்டான் ஆகிய ரஷ்யாவிற்கு இடையிலான ஆழமான கூட்டாண்மை குறித்து விவாதிக்க உள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி புடினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் செவ்வாயன்று மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலில், இருநாட்டு ஜனாதிபதிகளின் நிகழ்ச்சி நிரல் மற்றும் முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச தலைப்புகள் இரண்டையும் விவாதிப்பார்கள் என தெரிவித்தார்.
அத்துடன் இந்த சந்திப்பில் உக்ரைன் மற்றும் தைவான் பற்றியும், புவிசார் அரசியல் சூழ்நிலையில் "சிறப்பு முக்கியத்துவம்" பற்றியும் விவாதிப்பார்கள் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: துபாயில் வேலைக்காக சென்ற தமிழர் சுட்டுக் கொலை: பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வைத்து சித்ரவதை!
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.