ஜப்பான் ஓபன் பட்டம் வென்ற முதல் இந்தியர்! உலக சாம்பியனை வீழ்த்தி..வரலாறு படைத்த பி.வி.சிந்து
ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார்.
பி.வி.சிந்து
ஜப்பானில் நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகிய இருவரும் மோதினர்.
டோக்கியோவில் நடந்த இப்போட்டியில் பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
இதன்மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.
வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது
வெற்றி குறித்து பேசிய பி.வி.சிந்து, "எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; ஏனெனில், நீங்கள் குறிப்பிட்டது போல், நான் கடைசியாக வெற்றி பெற்று 19 மாதங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கிறேன். இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது.
ஏனெனில், இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒரு விடயம் என்றால், அதில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்துடன் மேடையில் நிற்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு உணர்வு.
வெற்றியாளராகத் திகழ்வதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்; இது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |