கழிவறையில் உட்கார்ந்து வீடியோ கேம் ஆடிய இளைஞருக்கு நேர்ந்த கதி! புகைப்படங்களுடன் எச்சரிக்கை செய்தி
மலேசியாவில் கழிவறையில் உட்கார்ந்து செல்போனில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்த இளைஞரை பின்பக்கத்தில் பாம்பு கடித்த சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
சபரி தஸ்லி (28) என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று இச்சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்ட 28 வயது சபரி உடலில் மலைப்பாம்பின் பற்களின் பாகங்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது.
சபரி கூறுகையில், அடிக்கடி கழிவறையில் உட்கார்ந்து 15 நிமிடங்கள் வரை செல்போனில் கேம் விளையாடுவேன். கடந்த மார்ச் 28ஆம் திகதி பாம்பு என் பின்பக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் பாம்பை அங்கிருந்து இழுத்து பிடித்தோம்.
என்னை கடித்தபோது பாம்பை அடித்ததால் பற்கள் உடைந்து உடலில் சிக்கியிருக்கலாம் என நினைத்தேன். அது போலவே காயமடைந்த பகுதியில் பற்கள் சிக்கியிருந்தது.
இதையும் படிங்க: லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள்
பாம்பு விஷம் இல்லாத பாம்பு என்றும், கடித்ததில் வலி இல்லை என்றும் தெரிந்ததும் நிம்மதி அடைந்தேன். சம்பவத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து அந்த பாம்பை பிடித்தனர். மருத்துவமனைக்கு சென்ற போது எனக்கு ஊசி செலுத்தப்பட்டது, அந்த பாதிப்பின் அதிர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை என கூறியுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து பழப்பு நிறத்தில் இருந்த கழிவறையின் நிறம் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பாம்பு கழிவறைக்கு வந்த பின்னர் அடுத்த இரண்டு வாரங்கள் அந்த கழிவறைக்குள் செல்லவே பயந்து உள்ளூர் மசூதியின் கழிவறையை சபரி பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவந்துள்ளது.
THE STAR/ASIA NEWS NETWORK