போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்: மத்திய கிழக்கு நாடுகள் பேச்சுவார்த்தை
இஸ்ரேல் உடனான போர் நடவடிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போர் நிறுத்தத்திற்கு சம்மதம்
இந்நிலையில், எகிப்து-கத்தார் ஆகிய இருநாடுகளும் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திங்கள் கிழமை அன்று ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கத்தார் பிரதம மந்திரி மற்றும் எகிப்தின் உளவுத்துறை அமைச்சருடன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தொலைபேசி அழைப்பில் இந்த செய்தியை வழங்கினார்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நிலைநாட்ட இந்த 2 மத்திய கிழக்கு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து இஸ்ரேலிடம் இருந்து கருத்துக்கள் எதுவும் வெளிவரவில்லை. அதே சமயம் போர் நிறுத்தம் குறித்து விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |