இலங்கை, இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு
கத்தார் சுகாதார அமைச்சகம் ஆறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை அறிவித்துள்ளது.
புதிய விதிகளின் படி, வங்கதேசம், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் (கத்தாரில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட) பயணிகள், கத்தார் வந்தவுடன் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியாகும் வரை இரண்டு நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும்.
பிசிஆர் சோதனையில் தொற்று இல்லை என உறுதியானவுடன் இரண்டாவது நாள் அவர்கள் தனிமைப்படுத்தும் மையத்தை விட்டு வெளியேறலாம்.
இந்த நாடுகளைச் சேர்ந்த மற்ற அனைத்து பயணிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், கத்தார் வந்தவுடன் 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும்.