காபூல் விமான நிலையம் தொடர்பில் வெடித்தது புதிய பிரச்சினை... தலிபான்களுக்கு கத்தார் பகிரங்க எச்சரிக்கை!
தலிபான்களுடன் தெளிவான ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் காபூல் விமான நிலையத்தை இயக்குவதை நிறுத்துவோம் என கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களுடன் பேச்சுவார்தை நடத்த கத்தார் முக்கிய மத்தியஸ்தராக திகழ்ந்தது.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானியர்களை வெளியேற்ற உதவிய கத்தார், புதிய தலிபான் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காபூல் விமான நிலையத்தில் மீண்டும் நடவடிக்கைகளை தொடங்க உதவியது.
இந்நிலையில் தலிபான்களுடன் தெளிவான ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் காபூல் விமான நிலையத்தை இயக்குவதை நிறுத்துவோம் என கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் Sheikh Mohammed bin Abdulrahman Al-Thani எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய Sheikh Mohammed bin Abdulrahman Al-Thani, அனைத்தும் விஷயங்களும் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்தும் விஷயங்களும் மிக தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றால், காபூல் விமான நிலையத்தின் பொறுப்பை எங்களால் ஏற்க முடியாது.
இப்போது ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது என கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் Sheikh Mohammed bin Abdulrahman Al-Thani தெரிிவித்துள்ளார்.