ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த கேரள இளம்பெண்... பிரித்தானியாவில் இன்று அவர்கள் என்ன செய்துள்ளார்கள் பாருங்கள்
கேரளாவைச் சேர்ந்த இளம் செவிலியர் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.
Joby என்ற அந்த செவிலியரும், அவரது கணவர் Shibu Mathewம் Aneetta, Anjel, Aleena, மற்றும் Aneesha (21) என்னும் தங்கள் நான்கு குழந்தைகளையும் இந்தியாவிலிருக்கும் தங்கள் உறவினர்களிடம் விட்டு விட்டு, 2007ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்கள்.
ஓராண்டு பெற்றோரைப் பிரிந்திருந்த குழந்தைகள் நால்வரும், அடுத்த ஆண்டு பிரித்தானியாவை வந்தடைந்தார்கள்.
செவிலியர் பட்டப்படிப்பு முடித்து இந்தியாவிலும் ஓமான் நாட்டிலும் செவிலியராக பணியாற்றிவந்த Joby, தன் நான்கு குழந்தைகளையும் வைத்துக்கொண்டே 2014 முதல் 2017 வரை மீண்டும் பிரித்தானியாவில் செவிலியர் பட்டப்படிப்பு முடித்து, தற்போது Ipswich மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் தன் தாய் செவிலியர் பட்டப்படிப்பை முடிந்தபோது, Aleena, தன் தாயிடம் அவரது பட்டமளிப்பு விழா அங்கியை தனக்குத் தரமுடியுமா என்று கேட்டாராம். அப்போது Joby, ஒரு நாள் உனக்கும் உன்னுடைய அங்கி கிடைக்கும் என்று சொன்னாராம்.
இன்று, Aleena மட்டுமல்ல, அவரது சகோதரிகள் Aneetta மற்றும் Anjelம் Suffolk பல்கலைக்கழகத்தில் செவிலியர் பட்டப்படிப்பு முடித்து, கேம்பிரிட்ஜிலுள்ள Royal Papworth மருத்துவமனையில் செவிலியர்களாக பணியில் இணைந்துள்ளார்கள். Aneesha ஒரு பிஸியோதெரபிஸ்ட் ஆகியுள்ளார்.
ஆக, பிள்ளைகள் நால்வருமே தன் தாயின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இன்று என் ஹெச் எஸ்ஸில் பணியாற்றிவருகிறார்கள்.
என் ஹெச் எஸ்ஸில் பணிபுரியும் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் எங்கள் பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார் பிள்ளைகளின் தந்தையான Shibu Mathew (53).