கனடா: க்யூபெக் மாநிலத்தில் புதிய Skilled Worker Program மீண்டும் தொடக்கம்
கனடாவின் க்யூபெக் மாநிலத்தின் திறமையாளர் தேர்வு திட்டம் (PSTQ), பல மாதங்களுக்கு பிறகு ஜூலை மாதம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தத் திட்டம், முன்னதாக அக்டோபர் 2024-இல் நிறுத்தப்பட்ட Regular Skilled Worker Program (PRTQ)-ஐ மாற்றி, நவம்பர் 29, 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அறிமுகம் செய்தவுடன் அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, Quebec அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம், புதிய தேர்வு அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு முறைமையுடன் PSTQ மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது:
- அதிக தகுதி வாய்ந்த மற்றும் நிபுணத்துவம் (qualified and specialized skills)
- இடைநிலை மற்றும் கைத்திறன் வேலைகள் (intermediate and manual skills)
- ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட தொழில்கள் (regulated professions)
- தனித்திறமை உள்ளவர்கள் (exceptional talent)
தேர்வுக்கான முக்கியக் காரணிகள்:
- கல்வித் தகுதி
- பயிற்சி
- வேலை அனுபவம்
- க்யூபெக் மாநிலத்தில் கல்வி பெற்றல் அல்லது வேலை செய்த அனுபவம்
- பிரஞ்சு மொழிப் புலமை (முக்கியமாக முதல் மூன்று பிரிவுகளுக்குத் தேவையானவை)
புதிய தேர்வு முறைப்படி, விண்ணப்பதாரர்கள் Arrima இணைய தளத்தில் தங்கள் Declaration of Interest (DOI) சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே DOI சமர்ப்பித்தவர்கள், நவம்பர் 29, 2024-க்கு பிந்தைய புதிய அளவீடுகளை பயன்படுத்தி தங்கள் சுயவிவரங்களை புதுப்பிக்க வேண்டியிருக்கிறது.
முதற்கட்டமாக ஜூலை மாதத்தில், க்யூபெக் மாநிலத்தில் வாழும், பிரஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்ற மற்றும் வேலைவாய்ப்பு தேவை உள்ள துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |