காதலரை துடிக்க துடிக்க உயிருடன் எரித்து கொன்ற கொடூர ராணி! வெளியான தகவல்கள்
ஆப்பிரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணி ஒருவர் செய்த கொடூர செயல்கள் அம்பலமாகியுள்ளது.
பொதுவாக அந்த காலத்தில் வாழ்ந்த அரசர்கள், அரசிகள் பெரும்பாலும் கொடூர ஆட்சி தான் செய்து வந்துள்ளனர். மக்களை காயப்படுத்தி அவர்களது கண்ணீரில் குளிர் காய்ந்துள்ளனர்.
அந்த வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆப்பிரிக்க அங்கோலாவின் ராணி என்ஜிங்கா எம்பாண்டி கொடூர அரசியாக கருத்தப்பட்டுள்ளார். அதாவது அவர் தந்து காதலருடன் உடலுறவு கொண்ட பிறகு அவரை உயிருடன் துடிக்க துடிக்க எரித்ததாக கூறப்படுகிறது.
இவர் என்ஜிங்கா எம்பாண்டி தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான தொங்கோ மற்றும் மாதம்பாவின் ராணியாக திகழ்ந்தார். இந்த ராணி குறித்து பல புத்தகங்களில் வெளியாகியுள்ளது.
அவரது அரண்மனையில் வசிக்கும் இரண்டு ஆண்களை தேர்ந்தெடுத்து ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த நபருடன் ராணி உடல் உறவு வைத்து கொள்வார்.
அதன் பிறகு அவரை உயிருடன் எரித்து கொன்றுவிடுவதாக கூறப்படுகிறது. இது போல பல ஆண்களை அவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். ஆனால் இதற்கான உண்மையான காரணம் குறித்து தெரியவில்லை.