ராணியார் மரணத்திற்கு காரணம்... ஸ்கொட்லாந்து நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல்
ராணியாரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்ள ஸ்கொட்லாந்து நிர்வாகத்திடம் கோரிக்கை
ராணியாரின் மரணத்திற்கான காரணம், எங்கே, எப்போது மரணம் நிகழ்ந்தது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அடங்கியிருக்கும்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படாது எனவும், அது ரகசியமாகவே இருக்கும் எனவும் ஸ்கொட்லாந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் வைத்து செப்டம்பர் 8ம் திகதி காலமானார். நீண்ட 10 நாட்கள் துக்கமனுசரிப்புக்கு பின்னர், உலகம் முழுவதிலும் இருந்து 2,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள,
@Shutterstock
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர், புனித ஜோர்ஜ் சிற்றாலயத்தில் தமது பெற்றோர் மற்றும் கணவர் உள்ளிட்டவர்களில் கல்லறையில், ராணியார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ராணியாரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்ள பல்வேறு ஊடக நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ராஜகுடும்பத்து ஆதரவாளர்கள் மற்றும் விசுவாசிகள் என அனைவரும் ஸ்கொட்லாந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுவாக ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் தொடர்பான முக்கிய அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது முறை. அதன் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, தற்போது ஸ்கொட்லாந்து நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
@getty
குறிப்பிட்ட தரவுகளில், ராணியாரின் மரணத்திற்கான காரணம், எங்கே அவர் மரணமடைந்தார், எப்போது மரணம் நிகழ்ந்தது உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அடங்கியிருக்கும். இந்த தரவுகளையே, தற்போது ஸ்கொட்லாந்து நிர்வாகம் வெளியிட மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாது எனவும், இனி அது ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ஆனால், ராணியார் இங்கிலாந்தில் மரணமடைந்திருந்தால், மரணத்திற்கான காரணம் வெளியிடும் தேவை இருக்காது. 1836ல் அமுலுக்கு கொண்டுவந்த சட்டத்திருத்தம் காரணமாக அவ்வாறான தரவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தேவையில்லை.
@getty
தற்போது ராணியார் ஸ்கொட்லாந்தில் மரணமடைந்துள்ளதால், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சட்டம் 1965ன் படி மொத்த தரவுகளும் 7 நாட்களுக்குள் பதியப்பட வேண்டும், மட்டுமின்றி இறப்பு சான்றிதழும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், ஸ்காட்லாந்தின் தேசிய பதிவேடு எனப்படும் NRS ராணியார் தொடர்பிலான தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகத்தினருக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.