பிரித்தானிய மகாராணியாருக்கும் அவரது செல்லப்பிராணிகளுக்கும் உருவாக இருக்கும் புதிய ஆபத்து
மகாராணியாரும் அவரது செல்லப்பிராணிகளான நாய்களும், கரடிகள் மற்றும் ஓநாய்களால் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணியார், பால்மோரல் எஸ்டேட்டின் தன் நாய்களுடன் உலாவச் செல்வதுண்டு.
ஆனால், இனி அப்படி அவர் செல்லும்போது, அவர் கரடிகள் மற்றும் ஓநாய்களால் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Lord Marland எச்சரித்துள்ளார்.
அதாவது, சுற்றுச்சூழலியலாளரான Chris Packham என்பவர், மகாராணியாருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மகாராணியார் தனது எஸ்டேட்களில் வன விலங்குகளை அனுமதிக்கவேண்டும். அப்போது நாம் அங்கு மீண்டும் கரடிகளையும் ஓநாய்களையும் பார்க்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Lord Marland, Chris Packhamஉடைய திட்டத்தைக் கேட்டு பெரும்பாலானோர் திகிலடைந்ததாக தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பால்மோரலுக்கு செல்லப்பிராணிகளுடன் செல்கிறோம், திடீரென நம் முன் ஒரு கரடியோ ஓநாயோ வந்து நின்றால் என்ன ஆகும் என்கிறார் Lord Marland