ராணியாரின் இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயம்: எதிர்பார்த்தது தான் என மக்கள் நெகிழ்ச்சி
ராணியாரின் இறப்பு சான்றிதழ் ரகசியம் காக்கப்படும் எனவும் கூறி வந்த ஸ்கொட்லாந்து நிர்வாகம்
இறப்பின் போது ராணியாருடன் இருந்த இளவரசி ஆன் இதே தகவலையே வெளியிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து நிர்வாகத்தால் பிரித்தானிய ராணியாரின் இறப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராணியாரின் இறப்பு சான்றிதழ் வெளியிடப்படாது, அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாது எனவும், ரகசியம் காக்கப்படும் எனவும் கூறி வந்த ஸ்கொட்லாந்து நிர்வாகம், பக்கிங்ஹாம் அரண்மனையின் கோரிக்கையை ஏற்று தற்போது அந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 8ம் திகதி உள்ளூர் நேரப்படி 3.10 மணிக்கு ராணியார் காலமானதாகவும், வயது மூப்பு காரணமாகவே ராணியார் இறந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இறப்பின் போது ராணியாருடன் இருந்த இளவரசி ஆன் இதே தகவலையே வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் பங்கிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், குறித்த இறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் தொடர்பில் தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதில், ராணியாரின் தொழில் குறித்த தகவலே, மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மட்டுமின்றி, இது தாங்கள் எதிர்பார்த்தது தான் எனவும் மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ராணியாரின் இறப்பு சான்றிதழில் தொழில் என்ற பகுதியில், மாட்சிமை மிகுந்த ராணியார் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள், அவரது தொழில் ராணியார் என குறிப்பிட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும், தாங்கள் எதிர்பார்த்த ஒன்று இதுவெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, இளவரசர் பிலிப்பின் இறப்பு சான்றிதழில், அவரது தொழில் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதும் பிரித்தானிய மக்களை மிகவும் கவர்ந்திருந்தது. அதில், ராணியாரின் கணவர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ராணியாரின் இறப்பு சான்றிதழில் அவரது முழு பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது, எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி எனவும், அவரது குடியிருப்பானது விண்ட்சர் மாளிகை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.