ராணியாரின் மரணம்... 3 மணி நேரம் கழித்து இளவரசர் ஹரிக்கு தெரிய வந்ததன் முழு பின்னணி
ராணியாரின் இறப்பு நேரம் தற்போது பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது
ராணியார் 3.10 மணிக்கே காலமானது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இளவரசர் ஹரிக்கு ஏன் 6.25 மணிக்கு தெரியப்படுத்தினார்கள்
பிரித்தானிய ராணியார் காலமானதன் பின்னர் 3 மணி நேரம் கழித்து அவரது பேரனான இளவரசர் ஹரிக்கு தெரிய வந்ததன் உண்மையான பின்னணி வெளியாகியுள்ளது.
பிரித்தானிய ராணியாரின் நல்லடக்கம் கடந்த 19ம் திகதி நடந்து முடிந்ததை அடுத்து, ஸ்கொட்லாந்து நிர்வாகம் தற்போது ராணியாரின் இறப்பு சான்றிதழை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள ராணியாரின் இறப்பு நேரம் தற்போது பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 8ம் திகதி ராணியார் காலமான நிலையில், அன்றைய நாள் இரவு 8 மணியளவில் ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகைக்கு சென்று சேர்ந்துள்ளார் இளவரசர் ஹரி. லண்டன் விமான நிலையத்தில் இருந்து அவர் 5.35 மணிக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.
@getty
மேலும், ராணியாரின் மறைவு தொடர்பில் உலக மக்களுக்கு அறிவிக்கப்படுவதற்கும் 5 நிமிடங்கள் முன்பு மட்டுமே இளவரசர் ஹரிக்கு தந்தை சார்லஸ் தொடர்புகொண்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணியார் 3.10 மணிக்கே காலமானது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இளவரசர் ஹரிக்கு ஏன் 6.25 மணிக்கு தெரியப்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
8ம் திகதி 12.35 மணியளவில் ராணியாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டது. அடுத்த 15 நிமிடங்களில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி ஸ்கொட்லாந்து விரைவதாக அறிக்கை வெளியானது.
@getty
மேலும், இளவரசர் வில்லியமும் பால்மோரல் மாளிகைக்கு புறப்பட இருப்பதாக கூறப்பட்டது. சார்லஸ்- கமிலா தம்பதி அன்றைய நாள் மதிய நேரம் பால்மோரல் மாளிகைக்கு சென்று சேர்ந்துள்ளனர். மதியம் 1.30 மணியளவில் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சோஃபி ஆகியோரும் பால்மோரல் விரைவாதாக தகவல் வெளியானது.
அடுத்த சில நிமிடங்களில் ஹரி மற்றும் மேகன் தம்பதியும் பால்மோரல் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பின்னர் நடந்த குடும்ப விவாதங்களுக்கு பின்னர் இளவரசர் ஹரி மட்டும் பால்மோரல் செல்வார் என கூறப்பட்டது. 2.39 மணிக்கு இளவரசர் வில்லியம், எட்வர்ட் மற்றும் சோஃபி ஆகியோர் லண்டனில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
ராணியார் 3.10 மணிக்கு காலமாகியுள்ளார் என உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது பேரப்பிள்ளைகள் எவரும் அப்போது ராணியாருடன் இல்லை. இளவரசர் ஹரி லண்டனில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் போது நேரம் 5.35. ஸ்கொட்லாந்தில் விமானம் தரையிறங்கும் போது நேரம் 6.47.
இதனிடையே பக்கிங்ஹாம் அரண்மனை 6.30 மணியளவில் ராணியாரின் இறப்பை அறிவித்திருந்தது. மேலும், 6.25 மனிக்கு மட்டுமே மன்னர் சார்லஸ் தமது மகன் ஹரியை தொடர்பு கொண்டு ராணியாரின் இறப்பு தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பால்மோரல் மாளிகையில் இருந்து அடுத்த நாள் பகல் சுமார் 8.30 மணிக்கு முதல் ஆளாக கிளம்பி ஹரி லண்டன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.