மகாராணி தான் இளவரசர் பிலிப்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை! கடைசி நிமிடங்களில் நடந்ததுஎன்ன? கசிந்த தகவல்
இளவரசர் பிலிப்பின் இறுதிநிமிடங்களில் வின்ட்சர் கோட்டையில் என்ன நடந்தது என்பது குறித்து அரண்மனை வட்டாரங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
வரலாற்றில் அதிக காலம் இளவரசாக இருந்தவர் என புகழ்பெற்ற பிலிப் ஏப்ரல் 9ம் திகதி காலை வின்ட்சர் கோட்டையில் காலமானார்.
இளவரசர் உயிர் பிரியும் போது மாகராணி அவருக்கு அருகில் தான் இருந்தார் என அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், கடைசி நாட்களை மகாராணியுடன் கழித்த இளவரசர் பிலிப், தனக்கு பிறகு எப்படி வழிநடத்த வேண்டும் என மாகராணிக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
மீண்டும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த பிலிப் வெள்ளிக்கிழமை காலை தனது அறையில் இறந்தார்.
வியாழக்கிழமை நள்ளிரவு அவரது உடல்நிலை மோசமடைந்த போது, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் மகாராணி வேண்டாம் என நிராகரித்து விட்டார்.
வீட்டிலேயே இறக்க வேண்டும் என்பது இளவரசர் பிலிப்பின் ஆசையாக இருந்தது. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவர் தனது நான்கு குழந்தைகளையும் தனித்தனியாக நேரில் சந்தித்தார்.
ஆனால் அவரால் இளவரசர் வில்லியம் உட்பட பேரக்குழந்தைகளையும், கொள்ளுப் பேரப்பிள்ளைகளையும் பார்க்க முடியவில்லை.
பிலிப் தனது படுக்கையறையில் இரண்டு புகைப்படங்களை வைத்திருந்தார், ஒன்று அவரது மனைவியுடையது மற்றொன்று அவருடைய தாயாருடையது என்று அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.