மக்கள் வெள்ளம் தன்னை மட்டும் பார்க்க வேண்டும்... ராணியார் இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸின் சுயநலம்
ராணியார் காலமான பின்னர், மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், அந்த திட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டுவந்தார்
இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் தம்மை கவனிக்காமல் போகவும் வாய்ப்பிருப்பதாக மன்னர் சார்லஸ் கவலை
ராணியார் இறுதிச்சடங்கிற்காக லண்டனில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் தன்னை முன்னிலைப்படுத்த, இறுதி ஊர்வலத்தில் மன்னர் சார்லஸ் சுயநலமாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய ராணியாரின் இறுதிச் சடங்குகள் தொடர்பில் 1960ல் இருந்தே திட்டமிடல் துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொருமுறையும் திட்டங்களில் திருத்தம் ஏற்பட்டும் வந்துள்ளது. பின்னர் இதுதி வடிவம் எட்டியது என்கிறார்கள் ராஜகுடும்பத்திற்கு நெருக்கமான அதிகாரிகள்.
@getty
ஆனால், ராணியார் காலமான பின்னர், மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், அந்த திட்டத்தில் மீண்டும் திருத்தம் கொண்டுவந்ததாகவும், அது அவரின் சுயநலத்தை வெளிப்படுத்தியது எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ராணியாரின் இறுதி ஊர்வலத்தில் குதிரைகளின் வரிசை நிலையில் அவர் அதிகம் கவலை கொண்டதாக கூறப்படுகிறது. குதிரைகளுக்கு பின்னால் ராஜகும்பத்து மூத்த உறுப்பினர்கள் நடந்து வருகையில், சமயங்களில் குதிரைகளின் கழிவுகளில் மிதிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
@getty
மேலும், இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் தம்மை கவனிக்காமல் போகவும் வாய்ப்பிருப்பதாக அவர் கவலை கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் புதிய திட்டத்தை வகுத்து, மன்னர் சார்லஸின் இருந்து ஒப்புதல் வாங்கியுள்ளனர்.
இதனால், ராணியாருக்கு மிகவும் நெருக்கமான குதிரைகள் உள்ளிட்ட மிருகங்கள், மன்னர் சார்லஸ் உட்பட ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் முன்னால் ஊர்வலத்தில் காணப்படவில்லை, மாறாக மிகவும் பின்வரிசையில் கலந்துகொள்ள வைக்கப்பட்டுள்ளது.
@afp
மன்னர் சார்லஸின் இந்த முடிவை ஒருசாரார் பாராட்டியுள்ளனர், குதிரைகளின் கழிவில் மிதிபடாமல் இராணுவ வீரர்கள், இசைக்குழுவினர் மற்றும் ராஜகுடும்பத்தினர் நடந்து செல்ல இது உதவியாதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதில் மன்னர் சார்லஸின் சுயநலம் வெளிப்பட்டதாகவே ஒருசிலர் கூறுகின்றனர்.