ராணியாரின் இறுதிச்சடங்கு: மொத்த தேசத்தின் இதயங்களையும் தன்வசப்படுத்திய குட்டி இளவரசர்
இளவரசர் ஜோர்ஜ் தமது பெற்றோருடன் இன்று ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.
கொள்ளுப்பாட்டியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட இளவரசர் துக்கம் தாங்க முடியாமல் கண்கள் துடைத்துள்ளார்.
பிரித்தானிய மன்னராகும் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் குட்டி இளவரசர் ஜோர்ஜ் தமது கொள்ளுப்பாட்டியாரின் இறுதிச்சடங்கில் துக்கத்தை மறைத்து கண்ணீரை துடைத்த காட்சிகள் பார்ப்பவர்களை உருக வைத்துள்ளது.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியின் 9 வயது மகன் இளவரசர் ஜோர்ஜ் தமது பெற்றோருடன் இன்று ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.
@getty
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இறுதிச்சடங்கில், குட்டி இளவரசரின் நடவடிக்கைகள் பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.
தமது கொள்ளுப்பாட்டியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட இளவரசர் துக்கம் தாங்க முடியாமல் கண்கள் துடைத்துள்ளார். மட்டுமின்றி பதற்றத்துடன் அடிக்கடி நாக்கை நீட்டியபடி காணப்பட்டார்.
@getty
தமது இளைய சகோதரி சார்லோட் மற்றும் பெற்றோர்களுக்கு நடுவே இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றுள்ளார். இன்றைய இறுதி ஊர்வலத்தில் கேட் மிடில்டனுடன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.