ராணியாரின் கைப்பை ரகசியம் அம்பலம்... அதனுள் இருக்கும் மர்ம பொருட்கள் என்ன தெரியுமா?
கருப்பு நிறத்தில் காணப்படும் கைப்பைகளில் அவருக்கு தேவையான பொருட்களை எப்போதும் எடுத்துச் செல்வார்
குறுக்கீடு செய்ய நினைத்தால் தனது கைப்பையை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றிக்கொள்வாராம்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் எங்கு சென்றாலும் தம்முடன் எடுத்துச் செல்லும் கைப்பை தொடர்பில் ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத் அசத்தலான உடைகளில் எப்போதும் காட்சி தருபவர். அத்துடன் கைப்பை ஒன்றையும் அவர் எப்போதும் வைத்திருப்பார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் Launer London என்ற நிறுவனம் வடிவமைக்கும் கைப்பைகளே ராணியார் பயன்படுத்தி வந்துள்ளார்.
மட்டுமின்றி, பெரும்பாலும் கருப்பு நிறத்தில் காணப்படும் அந்த கைப்பைகளில் அவருக்கு தேவையான பொருட்களை அவர் எப்போதும் எடுத்துச் செல்வார் என்றே கூறுகின்றனர். மேலும், குறித்த கைப்பையை குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தமக்கான ஆயுதமாகவும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
@getty
நாட்டின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் என அவர் அன்றாடம் பல சந்திப்புகளை எதிர்கொள்ள நேரிடும். அப்போது தமது ஊழியர்களுக்கு புரியும் வகையில் குறித்த கைப்பையால் ரகசிய தகவல்களையும் அவர் அனுப்பியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் தொடரும் உரையாடலை குறுக்கீடு செய்ய வேண்டும் என ராணியார் நினைத்தால், தனது கைப்பையை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றிக்கொள்வாராம்.
அப்போது அந்த குறியீடை புரிந்துகொண்டு அவரது ஆலோசகர்கள் உரிய ஆட்களை அனுப்பி வைத்து, அந்த உரையாடல்களில் இருந்து ராணியாரை காப்பாற்றுவார்களாம். மேலும், ராணியார் அவசரமாக ஒரு சந்திப்பில் இருந்து வெளியேற விரும்பினால், தனது பையை அப்படியே தரையில் வைப்பாராம்.
@getty
இரவு உணவு விருந்து என்றால், அடுத்த 5 நிமிடத்தில் முடித்துக் கொண்டு அவர் வெளியேற விரும்பினால், தமது பணப்பையை மேஜை மீது வைப்பாராம். அரண்மனையில் மிகுந்த பாதுகாப்பு விதிமுறைகள் இருந்தும், ராணியாரின் இந்த கைப்பை பயன்பாடு என்பது நடைமுறைக்கு சாத்தியமானது மற்றும் கண்ணியமானது என்றே கூறப்படுகிறது.
போரிஸ் ஜோன்சன் மற்றும் தெரசா மே ஆகியோருக்கு சத்தியப்பிரமாணம் செய்யும் போதும் ராணியார் கைப்பை அணிந்திருந்தார். ராணியார் பொதுவாக ஞாயிறன்று மட்டும் தமது கைப்பையில் பணம் வைத்திருப்பார் என கூறப்படுகிறது.
தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை பெட்டியில் 5 பவுண்டுகளுக்கான தாளை அவர் ஒவ்வொரு வாரமும் செலுத்தி வந்துள்ளார்.
மேலும், தமது கைப்பையில் படிக்கும் கண்ணாடிகள், புதினா மற்றும் ஒரு பேனாவை எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.