ராணியார் மறைவு... எத்தனை நாட்கள் துக்கமனுசரிக்கப்படும்? வெளிவரும் விரிவான தகவல்
ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என குறிப்பிடப்படும் முன்னெடுப்புகள் தொடர்பில் விரிவான தகவல்
இரண்டாவது நாள் காலை, கவுன்சிலின் உறுப்பினர்கள் இளவரசர் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள்
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் வியாழக்கிழமை ஸ்கொட்லாந்தில் தமது 96வது வயதில் காலமானதை அடுத்து, நாடு முழுவதும் துக்கமனுசரிக்கப்பட உள்ளது.
ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என குறிப்பிடப்படும் இந்த முன்னெடுப்புகள் தொடர்பில் தற்போது விரிவான தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய ராணியார் மறைந்துள்ள தகவல் பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகளால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 12 நாட்கள் பிரித்தானியாவில் துக்கமனுசரிக்கப்படும்.
@getty
இந்த 12 நாட்களும் என்னென்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அத்துடன், இளவரசர் சார்லஸ் முடிசூட்டும் விழா தொடர்பிலும் முடிவெடுக்கப்படும். துக்கமனுசரிக்கப்படும் இந்த நாட்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
ராணியாரின் உடல் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நாள் வரையில் அஞ்சலி செலுத்தப்படும். எலிசபெத் ராணியார் மரணமடைந்த தகவல் முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும்.
அவர் தொலைப்பேசியில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, "லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்" என்ற வாக்கியத்தைத் தெரிவிப்பார். அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்படும்.
@reuters
பொதுமக்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் உரியமுறைப்படி தெரிவிப்பார்கள். மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கு பிரதமர் தான் தகவலை அறிவிப்பார். இரண்டாவது நாள் காலை, பிரித்தானிய கவுன்சிலின் உறுப்பினர்கள் இளவரசர் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள்.
செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள். மூன்றாவது நாள் ராணியாரின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பும். அந்த நிகழ்வில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்.
நான்கு மற்றும் ஐந்தாவது நாட்களில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் மன்னர் சார்லஸ் இரங்கல் பிரேரணையைப் பெறுவார். தொடர்ந்து லண்டனில் தமது பணியை முடித்துக் கொண்டு ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு விஜயம் செய்வார்.
@pa
ஆறாவது நாள் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து ராணியாரின் உடல் பொதுமக்கள் ஊர்வலத்தினூடே வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்படும். ராணியார் மறைந்து பத்தாவது நாள் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும் வரையில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.
மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். 11வது நாள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும். அன்று நண்பகல், நாடு முழுவதும் 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்படும்.
தொடர்ந்து லண்டனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் உடன் செல்ல விண்ட்சர் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்படும்.
ராணியாரை விண்ட்சர் அரண்மனையின் கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்வதற்கு முன் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து அர்ப்பணிப்பு ஆராதனை முன்னெடுக்கப்படும்.