மருத்துவமனையில் ஒரு நாள்... பருவநிலை மாநாட்டில் ராணியார் பங்கேற்பா? பிரித்தானிய அரண்மனை விளக்கம்
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த வாரத்தில் ஒரு நாள் மருத்துவனையில் தங்கிய நிலையில் தற்போது கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி இரண்டாம் எலிசபெத் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதைக் கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் திகதி கிளாஸ்கோவில் நடைபெற உள்ள பருவ நிலை மாநாட்டில் ராணியார் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, ராணியார் இடண்டாம் எலிசபெத் பங்கேற்க இயலாத நிலையில், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மகன் இளவரசர் வில்லியம் ஆகியோர் தங்கள் மனைவியுடன் குறித்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.