ராணியாருடன் 30 வருடங்கள்... சார்லஸ் மன்னரால் கேள்விக்குறியான எதிர்காலம்: கவலையில் முக்கிய நபர்
ஏஞ்சலா கெல்லி என்பவரும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
ராணியாருக்கு இருந்த நட்புறவு சார்லஸ் மற்றும் கமிலாவுக்கு இவரிடம் இல்லை என்றே கூறப்படுகிறது.
பிரித்தானிய ராணியார் மறைவுக்கு பின்னர், அவருக்கு ஆடை அலங்காரம் செய்து வந்தவர், மன்னர் சார்லஸ் பொறுப்புக்கு வந்த நிலையில் எதிர்காலம் கேள்விக்குறியானதாக கவலை தெரிவித்துள்ளார்.
ராணியார் இரண்டம் எலிசபெத் காலமான நிலையில், அதுவரை கிளாரன்ஸ் மாளிகையில் வசித்து வந்த சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி இனி பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேற உள்ளது. இதனால் கிளாரன்ஸ் மாளிகையில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரது எதிர்காலமும் கேள்விக்குறியானது.
@getty
பணி தொடர்பில் அவர்களுக்கு உரிய தகவல் அளிக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது. தற்போது ராணியாருக்கு ஆடை அலங்காரம் செய்து வந்த 69 வயதான ஏஞ்சலா கெல்லி என்பவரும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
1993 காலகட்டத்தில் ஜேர்மனிக்கான பிரித்தானிய தூதராக செயல்பட்டு வந்தவர் சர் கிறிஸ்டோபர் மல்லபி. இவரது குடியிருப்பில் பணியாற்றி வந்தவரே இந்த ஏஞ்சலா கெல்லி. இந்த நிலையில் ராணியார் எலிசபெத்தும் இளவரசர் பிலிப்பும் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது ராணியாரை சந்திக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவரது எதிர்கால திட்டம் தொடர்பில் அறிந்து கொண்ட ராணியார், பின்னர் தமது ஆடை அலங்காரத்திற்கான பணியை ஏஞ்சலா கெல்லிக்கு அளித்துள்ளார். தற்போது ராணியார் காலமானதை அடுத்து மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ளார்.
@getty
மேலும், ராணியாருக்கு இருந்த நட்புறவு சார்லஸ் மற்றும் கமிலாவுக்கு இவரிடம் இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், ராணியாரின் அனுமதியுடன் ஏஞ்சலா கெல்லி வெளியிட்டுள்ள புத்தகங்கள் தொடர்பிலும் மன்னர் சார்லஸ் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ராணியார் காலமான பின்னர், பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியர்களில் 20 பேர்களிடம் வேறு வேலைத் தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிளாரன்ஸ் மாளிகையில் 100 பேர்களிடம் வேலை பறிபோகும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், கமிலாவுக்கு தனியாக ஆடை அலங்காரத்திற்கான ஊழியர் இருப்பதால், ஏஞ்சலா கெல்லிக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் வேலை இருக்காது என்றே கூறப்படுகிறது.
@getty