கிம் ஜாங் உன்னுக்கு பிரித்தானியா மகாராணி அனுப்பி ரகசிய செய்தி! முதன் முறையாக பொது வெளியில் வெளியிட்ட வட கொரிய ஊடகம்
கடந்த வாரம் வட கொரியாவின் தேசிய தினம் கொண்டாடியதை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பிரித்தானியா மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
73வது தேசிய தினத்தை கொண்டாடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், அதாவது செப்டம்பர் 7ம் திகதி பிரித்தானியா மகாராணி அனுப்பி வாழ்த்துச் செய்தி கிடைத்ததாக வட கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரியா ஜனநாயக மக்கள் குடியரசின் மக்கள் தங்கள் தேசிய தினத்தை கொண்டாடுகையில், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய நான் வாழ்த்துகிறேன் என மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியதாக வட கொரிய ஊடகம் வெளியிட்டுள்ளது.
கிம் ஜாங் உன்னுக்கு பிரித்தானியா மகாராணி அனுப்பிய வாழ்த்துச் செய்தி, பிரிட்டிஷ் ஊடகங்கள் அல்லது பக்கிங்ஹாம் அரண்மனையின் சமூக ஊடக பக்கத்திலோ பகிரப்படவில்லை.
மகாராணி கடந்த காலத்தில் இதே போன்ற வாழ்த்துச் செய்திகளை வட கொரியாவுக்கு அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இருப்பினும், மகாராணி அனுப்பிய செய்தி பொதுவெளியில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அலுவலகம் மூலம் மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.