பிரித்தானியா மகராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த ஆண்டும் ரத்து! அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை
பிரித்தானியா மகாரணி இரண்டாம் எலிசபத் பிறந்த நாள் கொண்டாட்டம் இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யபட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் மகாராணியின் பிறந்தநாளின் போது, நிகழ்ச்சிகள் போன்றவை வெகு விமர்சியாக நடைபெறும்.
ஆனால், கடந்த ஆண்டு கொரோனா நெருக்க டி போன்ற சூழ்நிலைகள் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் பிற தரப்பினரிடம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, அரசியின் அதிகாரப்பூா்வ பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசியின் பிறந்த நாளான வரும் 21-ஆம் திகதி, நாடு முழுவதும் பீரங்கி குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை அளிக்கப்படும் நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து கொண்டாட்டங்களும் நடைபெறாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியின் 69 ஆண்டு கால பதவிக் காலத்தில், அவரது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் முதல்முறையாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தான் ரத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.