பிரான்சில் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பெண் அமைச்சர்
பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சர், தனது விலையுயர்ந்த நகைகள் குறித்து முறைப்படி தெரிவிக்காததால் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்.
விசாரணைக்கு உட்படுத்தப்படும் பெண் அமைச்சர்
The Republicans கட்சியைச் சார்ந்த ரச்சிதா டதி (Rachida Dati, 59), தற்போது பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார்.
ரச்சிதா, 2007ஆம் ஆண்டு, பிரான்சின் நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு இஸ்லாமியப் பெண்ணொருவருக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது அதுவே முதல்முறை.
அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சார்க்கோஸி, பிரான்சிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்னும் ஒரு செய்தியை தெரிவிப்பதற்காகவே ரச்சிதாவுக்கு நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
ரச்சிதா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, Renault-Nissan கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், சட்டத்தரணியாக செயல்பட்டதற்காக அந்நிறுவனக் கிளை ஒன்றிலிருந்து 900,000 யூரோக்கள் கட்டணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அவர் அந்நிறுவனத்தில் எந்த பணியும் செய்யவில்லை.
ஆகவே, ரச்சிதா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்.
இந்நிலையில், தனது விலையுயர்ந்த நகைகள் குறித்து முறைப்படி தெரிவிக்காததால் ஊழல் தடுப்பு அதிகாரிகளாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார் ரச்சிதா.
பிரான்சைப் பொருத்தவரை, அமைச்சர்கள் தங்களிடமிருக்கும் 10,000 யூரோக்களுக்கு அதிகமான மதிப்புடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிடவேண்டும்.
அப்படி சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிடாதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 45,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும்.
ஆனால், ரச்சிதா தன்னிடமுள்ள 19 நகைகள் குறித்த விவரத்தைத் தெரிவிக்கவில்லை. அவற்றின் மதிப்பு 420,000 யூரோக்கள் ஆகும்.
ஆகவே, ஊழல் தடுப்பு அதிகாரிகளாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார் ரச்சிதா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |