இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்: கெட்ட வார்த்தைகளில் திட்டி அடிக்கும் அமெரிக்க பெண்., வீடியோ வைரல்..
டெக்சாஸில் இந்திய வம்சாவளினர் மீது மெக்சிகன்-அமெரிக்க பெண் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
"நீங்கள் இந்தியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள்" என்றும் தனக்கு இந்தியர்களை பிடிக்கவில்லை என்றும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி தாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய-அமெரிக்க பெண்களை மெக்சிகன்-அமெரிக்க பெண் ஒருவர் இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தாக்குதல் நடத்திய மெக்சிகன்-அமெரிக்க பெண் பிளானோவைச் சேர்ந்த வின் Esmeralda Upton என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நான்கு இந்திய-அமெரிக்க பெண்களைக் கொண்ட குழுவைத் தாக்கி இனரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த அப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண், தன்னை ஒரு மெக்சிகன்-அமெரிக்கர் என அடையாளப்படுத்தி இந்திய-அமெரிக்கர்களை தாக்கும் அந்த வீடியோவில், "இந்தியர்களை நான் வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு வருகிறார்கள், ஏனெனில் அவர்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள்" என்று அந்த பெண் வீடியோவில் மீண்டும் மீண்டும் 'F**king' என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தினார்.
இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலின் வீடியோ தற்போது அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை வெளியிட்ட நபர், "இந்த சம்பவம் டெக்சாஸின் டல்லாஸில் எனது அம்மாவும் அவரது மூன்று நண்பர்களும் இரவு உணவிற்குச் சென்றபோது நிகழ்ந்தது" என்று எழுதினார்.
மெக்சிகன்-அமெரிக்கப் பெண்மணியின் வாதங்களை எதிர்த்து அம்மா அமைதியாக இருப்பது போல் தெரிகிறது. இன அவதூறுகளைச் செய்ய வேண்டாம் என்று தாக்கியவரிடம் அவள் கோருவதைக் காணலாம்.
This is so scary. She actually had a gun and wanted to shoot because these Indian American women had accents while speaking English.
— Reema Rasool (@reemarasool) August 25, 2022
Disgusting. This awful woman needs to be prosecuted for a hate crime. pic.twitter.com/SNewEXRt3z
ஒரு கட்டத்தில், அமெரிக்காவில் பிறந்ததாகக் கூறும் மெக்சிகன்-அமெரிக்கப் பெண், இந்தியப் பெண்ணையும் அவரது மற்ற நண்பர்களையும் தாக்குவதைக் காணலாம்.
"நான் எங்கு சென்றாலும், நீங்கள் எல்லா இடங்களிலும் இந்தியர்கள்" என்று அவர் கதறுவது வீடியோவில் உள்ளது.
"இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்திருந்தால், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்" என்று மீண்டும் மீண்டும் திட்டிக் கொண்டே கத்தினார். அவள் திடீரென்று நான்கு இந்தியப் பெண்களைத் தாக்கத் தொடங்குகிறாள்.
பிளானோ காவல்துறை துப்பறியும் நபர்கள் பிளானோவின் எஸ்மரால்டா அப்டனை கைது செய்தனர். அவர் மீது தாக்குதல், உடல் காயம் மற்றும் ஒரு தீவிரவாத அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மொத்தம் 10,000 அமெரிக்க டொலர் பத்திரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.