இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம்
இந்தியாவுடனான சமீபத்திய இராணுவ மோதலின் போது ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் கூற்றை டசால்ட் ஏவியேஷன் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் உறுதியாக நிராகரித்துள்ளார்.
பிரெஞ்சு உற்பத்தியாளரிடமிருந்து
இதனால், பாகிஸ்தான் இதுவரை கூறிவந்த தகவல் தவறானது என்று உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பல வாரங்களாக நீடித்து வந்த ஊகங்களுக்கு பிரெஞ்சு உற்பத்தியாளரிடமிருந்து வந்த முதல் பதில் இதுவாகும்.
ரஃபேல் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறிவரும் கருத்துக்கு விளக்கம் கேட்டு இதுவரை இந்திய தரப்பில் இருந்து தொடர்பு கொள்ளவில்லை என்றும், அதனால் என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீன தயாரிப்பு விமானம் மற்றும் ஏவுகணைகளால் பாகிஸ்தானியர்கள் [மூன்று ரஃபேல் விமானங்கள் அழிக்கப்பட்டன] என்று சொல்வது தவறானது என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் டிராப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் போர் விமானங்களை இயக்கும்போது, நீங்கள் ஒரு பணியை மேற்கொள்கிறீர்கள். அந்த பணியின் வெற்றி என்பது பூஜ்ஜிய இழப்புகளைக் கொண்டிருப்பதல்ல; அது அதன் நோக்கங்களை அடைந்துவிட்டால் போதும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மட்டுமின்றி, இழப்புகள் ஏற்பட்டனவா இல்லையா, போரின் நோக்கங்கள் அடையப்பட்டதா என்பது உண்மை வெளிவரும்போது, சிலர் ஆச்சரியப்படலாம் என்றும் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.
இழப்புகள் இருக்கும்
முன்னதாக தளபதி அனில் சவுகான் குறிப்பிடுகையில், போர் என்றால் இழப்புகள் இருக்கும், ஆனால் பாகிஸ்தான் குறிப்பிடுவது போன்று 6 விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.
மே 7 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒருங்கிணைந்த இராணுவ பதிலடியாகும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் ஒரு மீற்றர் துல்லியத்துடன் இந்தியா வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தானின் இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களின் பயனற்ற தன்மையை அம்பலப்படுத்தியதாகவும் தளபதி சவுகான் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |