இனி இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை! அடித்து கூறும் காம்பீர்
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர், சீனியர் வீரர் ஒருவருக்கு இனி அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில், இதுவரை டெஸ் அணிக்கு துணை கேப்டனாக இருந்த ரஹானேவின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ராஹானேவின் ஆட்டம் கடந்த சில மாதங்களாக அந்தளவிற்கு இல்லாத காரணத்தினால், அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் ரஹானே நீக்கப்பட்டது குறித்து கூறுகையில், துணை கேப்டன் என்ற காரணத்தினால் மட்டுமே ரஹானே அணியில் நீடிக்கிறார்.
அவருடைய ஆட்டம் தற்போது மிகவும் மோசமாக உள்ளதால் அவரது இடத்தினை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி ஸ்ரேயஸ் அய்யர் வருகை, இந்திய அணிக்கு பலத்தை கூட்டியுள்ளதால், ரஹானேவுக்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டம்.
தன்னைப் பொறுத்தவரை, இனிவரும் போட்டிகளில் ரஹானே விளையாடுவது கேள்வி குறி தான், அதே சமயம் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரி அணியில் விளையாட வாய்ப்பு அதிக உள்ளதாக கூறியுள்ளார்.