பிரச்சினைகளை தரும் ராகு : ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்
குரு அதிபதியாக கொண்ட மீன ராசியில் ராகுவும், புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறது.
இந்த அமைப்பானது ஒரு சில ராசியினரின் வாழ்க்கையில் நல்ல பலனையும் மந்தமான பலனையும் தரவிருகிறது.
ராகு மற்றும் கேது ஒரு போதும் நன்மையை தரப்போவதில்லை. அவ்வாறு நன்மையை வழங்கினாலுமே அதை விட பெரிதாகவே எடுத்துச் செல்வார்கள். நம்முடைய குருவின் பலத்தை அதிகரிப்பதும், மற்ற கிரகங்களில் பலத்தை அதிகரித்துக் கொள்வது மட்டுமே சிறந்தது.
அந்தவகையில் எந்தெந்த ராசியினருக்கு மந்தமான பலன்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.
தனுசு ராசி
4ம் வீட்டில் ராகுவும், 10ல் கேதுவும் இருப்பதால் உங்களின் சுக ஸ்தானம் பாதிக்கப்படுகிறது.
- ஆரோக்கியத்தில் கூடிய கவனம் தேவை.
-
உடற்பயிற்சி, சிறப்பான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
-
வசதிகள் குறைய வாய்ப்புள்ளது.
- பணம் சார்ந்த விடயங்களில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
-
உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
- சொத்து தொடர்பான விஷயங்களில் தகராறு ஏற்படலாம்.
- சட்ட ரீதியான சிக்கல் ஏற்படும்.
கும்ப ராசி
2ம் வீடான தன ஸ்தானத்தில் ராகுவும், 8ல் கேதுவும் சஞ்சாரம் செய்யவுள்ளனர்.
-
செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
-
கடினமாக உழைக்க வேண்டும்.
-
பயணங்களின் போது கவனமாக இருக்கவும்.
-
சக ஊழியர்களுடன் தகராறுகளை தவிர்க்கவும்.
- முதலீடுகள் செய்யும் முன் ஆலோசனை பெறுவது நல்லது.
மீன ராசி
மீன ராசியில் தான் ராகுவின் சஞ்சாரம் நிகழ்கிறது.
-
வேலைகள் தொடர்பான விடயங்களில் சிந்தித்து செய்றபடவும்.
-
சச்சரவுகளிலிருந்து விலகி இருக்கவும்.
- கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம்.
- தொழில், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம்.
-
பொறுமையுடன் திட்டமிட்டு செயல்படவும்.
- வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும்.
-
வேலைகளை தக்க வைத்துக் கொள்வது அவசியம்.
- மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |