ராகுல் காந்தி 'Flying Kiss' கொடுத்தார்! பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்
ராகுல் காந்தி ப்ளையிங் கிஸ் கொடுத்தாக கூறி பாஜக பெண் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.
மக்களவையில் ராகுல் காந்தி
இந்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இன்று மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றிய போது மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து ஆவேசமாக பேசினார்.
அவர், முக்கியமாக மணிப்பூர் கலவரம் தொடர்பாக மோடியை குறிப்பிட்டு பேசினார். ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் பாஜக எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவர் பாதியிலேயே உரையை நிறுத்திவிட்டு கிளம்பினார்.
பாஜக பெண் எம்பிக்கள் புகார்
ராகுல் காந்தி புறப்படும் போது கையில் இருந்த கோப்புகளை கீழே போட்டதால், பாஜக எம்பிக்கள் நகைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவர் பாஜக பெண் எம்பிக்களை பார்த்து ப்ளையிங் கிஸ் கொடுப்பது போன்ற செய்கையை செய்தார் என மத்திய அமைச்சர் ஷோபா கரண்டலஜே மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளார்.
அதாவது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை பார்த்து ராகுல் காந்தி ப்ளையிங் கிஸ் கொடுத்ததாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |