ஜேர்மனி வேலைநிறுத்தம்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு
ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்துடன், ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தமும் இணைந்துகொண்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஜேர்மனி முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் இன்று அதிகாலை 3.00 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது. ஆனாலும், நாள் முழுவதும் அதன் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே யூனியனைச் சேர்ந்த ஊழியர்கள் 12 சதவிகித ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஊதிய உயர்வு தொடர்பில் அடுத்த செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
Die Eisenbahn- und Verkehrsgewerkschaft #EVG hat für Freitag, den 21.4. einen erneuten #Warnstreik angekündigt. Wir gehen von massiven Auswirkungen auf den gesamten Bahnbetrieb aus und werden so schnell und umfassend wie möglich informieren. https://t.co/gW9M3hgjIU #EVGStreik pic.twitter.com/8UTTN7dgYZ
— Deutsche Bahn AG (@DB_Presse) April 19, 2023
விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ஏற்கனவே Düsseldorf, Hamburg, Cologne/Bonn, Karlsruhe/Baden-Baden மற்றும் Stuttgart விமான நிலையங்களில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வேலைநிறுத்தம் காரணமாக 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் மட்டும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.