தீபாவளிக்கு மழை பெய்யுமா? - ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை
வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2 காற்றழுத்த தாழ்வு நிலை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வவங்கக்கடல் பகுதிகளில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், அது மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மழை
இன்று தமிழகத்தின் அநேக பகுதிகளில் மிதமான மழை பொழியும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில், இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேளம்பாக்கம் - சிறுசேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தீபாவளிக்கு மழை?
தீபாவளியை பொறுத்தமட்டில், காலை 4 மணி முதல் 7 மணி வரை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை நேரங்களில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
ஆனால் இந்த மழை கனமழையாக இல்லாமல் இடியுடன் கூடிய மிதமான மழையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |