ஓமிக்ரான் தொற்று... முதன்முதலில் எச்சரித்த மருத்துவர் கூறிய பிரதான தகவல்
உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பில் முதன்முதலில் எச்சரிக்கை விடுத்த தென்னாப்ரிக்க மருத்துவர் பிரதான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருபவர் மருத்துவர் Angelique Coetzee. இவரே தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா மாறுபாடு Omicron தொடர்பில் முதன்முதலில் எச்சரிக்கை விடுத்தவர்.
அவர் தெரிவிக்கையில், ஓமிக்ரான் நோயாளிகள் எவரும் பொதுவாக கொரோனா தொற்றுடன் தொடர்புடைய வாசனையின் சுவை இழப்பால் பாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தீவிரமான சோர்வு மற்றும் அதிக நாடித் துடிப்பு விகிதம் போன்ற அசாதாரண நிலையில் காணப்பட்டதாக மருத்துவர் Angelique Coetzee தெரிவித்துள்ளர்.
மட்டுமின்றி, ஓமிக்ரான் நோயாளிகளின் அறிகுறிகள் தாம் முன்பு சிகிச்சையளித்தவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாகவும் மிகவும் லேசானதாகவும் இருந்தன என குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 18ம் திகதி கொரோனா பாதிப்பால் சிகிச்சை நாடி வந்த நால்வர் கொண்ட குடும்பம் ஒன்றை பரிசோதித்த அவர், கொரோனா பாதிப்பு உறுதி செய்த பின்னர் அவர்கள் கடுமையான சோர்வுடன் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட Omicron, தற்போது பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், பொஸ்வானா, இஸ்ரேல், ஹொங்ஹொங் மற்றும் அவுஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது,
அதே நேரத்தில் ஆஸ்திரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் Omicron தொற்று தொடர்பில் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.