கடைசி ஓவரில் சொதப்பிய பஞ்சாப்! 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 186 ஓட்டங்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸ் அந்த அணியின் ஓப்பனிங் ஜோடியான எவின் லீவிஸ் - ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 54 ஓட்டங்களை சேர்த்தனர். லீவிஸ் 36 ஓட்டங்களுக்கு அவுட்டானார்.
அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ஓட்டங்கள், லிவிங்ஸ்டன் 25 ஓட்டங்களுக்கு வந்த வேகத்தில் வெளியேறினர். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் - லாம்ரார் சீரான வேகத்தில் ஓட்டங்களை உயர்த்தினர். எனினும் இந்த ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கடைசி கட்டத்தில் சொதப்பல் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 49 ஓட்டங்களுக்கு வெளியேறினார். லாம்ரார் 43 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.
இதன் பின்னர் வந்த வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ஓட்டங்களை எடுக்கவில்லை. ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ் என அனைவரும் ஏமாற்றினர். 166 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்களும், முகமது ஷமி 3 விக்கெட்களும் எடுத்தனர்.
187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி யில் தொடக்க ஜோடி முதலில் நிதானமாக விளையாடினர்.
கே.எல்.ராகுல் தொடக்கத்திலேயே கொடுத்த 3 கேட்ச்களை ராஜஸ்தான் வீரர்கள் தவறவிட்டதால், அந்த அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 120 ஓட்டங்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 49 ஓட்டங்களுக்கு அவுட்டானார். அடுத்த சில பந்துகளில் மயங்க் அகர்வால் 67 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம் மற்றும் நிகோலஸ் பூரண் சீரான வேகத்தில் ஓட்டங்களை உயர்த்தினர். இருப்பினும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் நிலைமை அப்படியே மாறியது. கடைசி 6 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது அந்த ஓவரை வீசிய இளம் வீரர் கார்த்திக் தியாகி, முதல் பந்து டாட் ஆனது. 2வது பந்தை மர்க்ராம் ஒரு ரன் அடித்தார். 3வது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த நிகோலஸ் பூரணின் விக்கெட்டை எடுத்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் 4 வது பந்தும் டாட் ஆனது.
5வது பந்தில் தீபக் ஹூடா டக் அவுட்டாகி வெளியேறினார். கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது அதுவும் டாட் ஆனது. இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார் கார்த்திக் தியாகி.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை எடுத்தது.
இந்த போட்டியிலும் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததால் இந்த சீசனில் தனது 6வது தோல்வியை பதிவு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.