எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டி முன்னாள் முதலமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்துள்ளார்.
நள்ளிரவில் தியானம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் அதிமுகவும் பாஜகவுடன் சேர்ந்து அரசியல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டி முன்னாள் முதலமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்துள்ளார்.
அதாவது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் தியானம் செய்தார்.
முன்னதாக, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்து விட்டு மெரினா கடற்கரையில் தியானம் செய்தது கட்சிக்கும் சலசலப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |