ரஜினி கடைசி நேரத்தில் இப்படி செய்தது பேரதிர்ச்சி! நடிகை கவுதமி வெளிப்படை பேட்டி
ரஜினி அரசியல் முடிவை கைவிட்டது பேரதிர்ச்சியாக உள்ளது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று இன்று காலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன் பின் அவர் எந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பையும் சந்திக்கவில்லை. இவரின் இந்த முடிவு ரசிகர்கள் சிலருக்கு அதிர்ச்சியாக உள்ளது.
மேலும் இணையவாசிகள் பலரும் ரஜினியை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
— Rajinikanth (@rajinikanth) December 29, 2020
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேர்தல் பொறுப்பாளரும் நடிகையுமான கவுதமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது. தமிழகம் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது.
ரஜினி கடைசி நேரத்தில் அவர் கட்சி அறிவிப்பு திட்டத்தை கைவிட்டது. அவருடைய சூழ்நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்திருப்பார். அவர் நல்லபடியாக இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன்.
ரஜினி அரசியல் முடிவால் பாஜக எந்த விதத்திலும் குழுவில் இருந்து பின்வாங்காது எங்களுடைய பணிகள் தொடரும்.
ரஜினியை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்ற திட்டம் கைவிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு, கட்சி ஆரம்பிக்காத ஒருவரை வைத்து இதுபோன்று பேசுவது அர்த்தம் இல்லாத பேச்சு.
மக்கள் யார் நல்லது செய்துள்ளார்கள் என்பதை வைத்து தான் ஓட்டு போடுவார்கள். நியாயமான கட்சிக்கு மக்கள் ஒட்டு போடுவார்கள்.
பாஜக தேசிய கட்சி ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் பணிகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என கவுதமி தெரிவித்துள்ளார்.

