சுவாதியை என் புள்ள கொல்லல! அவளை உண்மையில் கொன்னது? மீண்டும் சூடுபிடித்த தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. உடைத்து பேசிய ராம்குமார் அப்பா
அதிமுக அரசு இருந்த போது சுவாதி - ராம்குமார் வழக்கில் சரியான விசாரணை நடக்கவில்லை எனவும் தற்போதைய திமுக அரசாவது இதில் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் எனவும் ராம்குமாரின் தந்தை பரமசிவன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் சிறை மரணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டான் ராம்குமார் என்று சிறைத்துறை அறிவித்தாலும் ராம்குமாரின் மரணத்தில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இது குறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ராம்குமார் இறந்து 5 வருடம் ஆகுது. ஆனால், எங்கக் குடும்பமே அவனை நினைத்து தவித்து வருகிறோம்.
என் மனைவி புஷ்பம் மகனை நினைச்சி அழுவாத நாளில்லை. நடைபிணமாவே ஆகிட்டா. எங்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருடமாக குழந்தை இல்லை. தவம் இருந்து பெத்தப் புள்ளைத்தான் ராம்குமார். அவனுக்கு அடுத்ததாதான் ரெண்டு பொண்ணுங்க பொறந்தாங்க. ஒரே ஆறுதல், ராம்குமார் மூத்த தங்கை மதுபாலாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது,
அதாவது எங்களுக்கு பேரன் பிறந்திருக்கான். அது, அப்படியே என் மகன் ராம்குமார்தான். அவனே, தங்கச்சி வயித்துல மகனா பொறந்திருக்கான்னு நினைச்சிக்கிட்டோம். காவல்துறையும் அரசும் சேர்ந்துதான் ராம்குமாரை கொலை செஞ்சாங்க. இது கொலைதானே தவிர தற்கொலை கிடையாது.
என்ன உண்மையோ அதை தான் மருத்துவர்கள் சொல்லிருக்காங்க. அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைத்தும் சரியா விசாரணை நடக்கவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதி என அந்த அரசும் கண்டுக்கலை.
இப்போ, திமுக அரசு வந்தப்பிறகுதான் மனித உரிமை ஆணையத்துல இருந்து விடை கிடைச்சுட்டு இருக்கு. முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டிப்பா உண்மையைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
திமுக அரசாவது சுவாதியை உண்மையில் கொன்னது யார் என கண்டுப்பிடிக்கணும். சுவாதியும் என் பொண்ணு மாதிரிதான். என் உயிரே போனாலும் சரி சுவாதியை என் புள்ள கொலை செய்யலை.
அவளை கொலை செய்தது யார் என்பது எங்களுக்கு தெரிந்தே ஆகணும். என் ராம்குமார் நிரபராதி என வெளியில் தெரிய வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.