ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை அடுத்து... ரூ 1200 கோடி திரட்டிய இந்திய ட்ரோன் நிறுவனம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்திய நான்கு நாள் மோதலில், பாகிஸ்தானின் ஏவுகணைகளை எதிர்கொள்ள ட்ரோன் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி
அதன் வெற்றி தற்போது இந்திய இராணுவத்தில் அதுபோன்ற ட்ரோன் அமைப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நொய்டாவை சேர்ந்த ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தற்போது தங்கள் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக ரூ 1200 கோடி தொகையை திரட்டியுள்ளனர்.
Raphe mPhibr என்ற அந்த குட்டி நிறுவனம் திரட்டியுள்ள அந்தத் தொகை, இந்திய விண்வெளி உற்பத்தி நிறுவனம் ஒன்று இதுவரை திரட்டிய மிகப்பெரிய நிதியாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 900 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பிறகு, இந்திய ராணுவம் Raphe mPhibr உட்பட பல முன்னணி நிறுவனங்களிடமிருந்து தற்கொலை ட்ரோன்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளது.
எதிரியின் பிரதேசத்தில் விரைவான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்குதல்களுக்காக ட்ரோன்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்திய இராணுவத்திற்கு அதிக திறன் கொண்ட ட்ரோன்களை வழங்க Raphe mPhibr நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
அரசு நிறுவனங்கள்
விவேக் மற்றும் விகாஷ் மிஸ்ரா என்ற இரு சகோதரர்களால் கடந்த 2017ல் நிறுவப்பட்டுள்ளது Raphe mPhibr நிறுவனம். இதில் விவேக் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் விகாஷ் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
விகாஷ் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியிலும், விவேக் ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரியிலும் பட்டம் பெற்றுள்ளனர். Raphe mPhibr நிறுவனம் தற்போது 4.4 பவுண்டுகள் முதல் 441 பவுண்டுகள் வரை பாரம் எடுத்துச் செல்லக் கூடிய ஒன்பது ட்ரோன்களை வழங்குகிறது, சராசரியாக 12 முதல் 124 மைல்கள் தூரத்தை உள்ளடக்கியது.
மேலும் Raphe mPhibr நிறுவனம் தங்கள் ட்ரோன்களில் AI-ஐப் பயன்படுத்துகிறார்கள், அத்துடன் தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பிற இந்திய அரசு நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |