ஒரு லிட்டர் பால் போதும்.., தித்திக்கும் சுவையில் ரசமலாய் செய்யலாம்
பால் வைத்து செய்யப்படும் ரசமலாய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் ரசமலாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1லிட்டர்
- எலுமிச்சை- 1
- முந்திரி- 5
- பாதம்- 5
- பிஸ்தா- 5
- சர்க்கரை- 6 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- குங்குமப்பூ- 5 இதழ்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி பால் சேர்த்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து திரிந்து வந்ததும் ஒரு துணியில் வடிகட்டி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மீதி பால் சேர்த்து அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதித்து வந்ததும் இறக்கவும்.
அடுத்து பிழிந்து வைத்த பன்னீரை பிணைந்து சிறிய உருண்டையாக பிடித்து அழுத்தி வைக்கவும்.
இதற்கடுத்து ஒரு பத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதித்ததும் அந்த உருண்டையை 10 நிமிடம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இறுதியாக பன்னீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் கொதிக்கவைத்த பால் சேர்த்து 15 நிமிடம் குளிர்வித்து எடுத்தால் சுவையான ரசமலாய் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |