டி20 உலக கோப்பையில் மண்ணை கவ்விய இந்திய அணி! அஸ்வின்லாம் எதுக்கு? பிரபல வீரர் காட்டம்
டி20 உலக கோப்பையில் மோசமாக செயல்பட்ட இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனீரியா விமர்சித்துள்ளார்.
படுதோல்வியடைந்த இந்திய அணி
உலக கோப்பை 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. குறிப்பாக இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.
இதன் காரணமாக இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதிலும் அஸ்வின் 6 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
AP
அஸ்வின் மீது தனீஷ் கனீரியா விமர்சனம்.
இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனிஷ் கனீரியா கருத்து தெரிவிக்கையில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சோபிக்கவில்லை.
அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட வேண்டும். விராட் கோலி அவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைத்தது சரியான முடிவு. நீங்கள் எப்படி அவரை டி20 போட்டியில் விளையாட வைக்க முடியும்?
ஆப்-ஸ்பின் பந்து வீசாத ஒருவரை ஆப் ஸ்பின்னர் என்ற பெயரில் நீங்கள் விளையாட வைக்கிறீர்கள் என கூறியுள்ளார்.