கோலியை தொடர்ந்து பதவி விலக போவதாக சூசகமாக அறிவித்த முக்கிய புள்ளி! அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்? கசிந்த தகவல்
கோலியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதவி விலக போவதாக சூசகமாக அறிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பதிவியிலிருந்து விலக போவதாக விராட் கோலி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார்.
இதனிடையே, கோலியை தொடர்ந்து டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக போவதாக ரவி சாஸ்திரி சூசகமாக தெரிவித்துள்ளார்.
கோலிக்கு பதில் இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பு ரோகித், கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பந்த் ஆகிய மூவரில் ஒருவருக்கு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம், ரவி சாஸ்திரிக்கு பதிலாக யார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மணன் இருவரில் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.